தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Tuesday, April 22, 2008

மதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது

மதுரை: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நேற்று அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நூற்றுக்கணக்கான தேவரினத்தவர் கூடி அவமதித்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை, தேவர் சிலை உள்ள பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவரது பெயர் திருவழகன் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.


அவர்தான் தேவர் சிலையை அவமதித்தது என்றும் தெரிய வந்தது. அவர் மன நோயாளி போல தென்படுகிறார்.இருப்பினும் அவரைக் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source: Oneindia



/இதற்கு தனி விமர்சனம் தேவையில்லை/


மர்பி விதிகள் முதல்பகுதிக்கு கிளிக் செய்யுங்கள்

மர்பியின் விதிகள்: 6 - 10


6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.


7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.


8. புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும்.


9. எல்லா விசயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.


10. உடைபொடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே நேர் விகிதித்திலேயே இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home