தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, June 29, 2008

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை - பதிவர்களுக்கு வசதி

இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார்.

உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

Labels:

Saturday, June 28, 2008

சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலசமயம் அவர் பழைய பாடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும் எனக்கூறும் போது அப்பழைய பாடங்களை கண்டுபிடிக்க மிகச்ச்றமம் ஏற்படுகிறது.

அவரே பாடங்களை 1-10,11-20 வரிசைப்படுத்தி கொடுத்து இருந்தாலும் எது எவ்விடம் எனக்கண்டுபிடிக்க தாவு தீர்ந்துவிடும் (நன்றி லக்கிலுக்)

மற்றும் புதியதாய் படிக்க வருபவர்கள் அவரது பாடத்தினை படிக்கவேண்டுமானல் பாடங்கள் தலைகீழ் வரிசையில் இருப்பதால் படிப்பதற்க்குள் புதியவர்களுக்கு டிரவுசர் கழண்டுவிடும் (உதவி: வால்பையன்) எனக்கும் சென்ற வருடம் முதலில் பாடத்தை படிக்க ஆரம்பித்த சமயம் அந்நிலைமைதான்.

மேலும் வாத்தியார் ஐயா பாடத்துடன் பலவிதமான கதைகளுடன் கலந்து அளித்துள்ளார்.

ஆகவே அவரது பாடத்தினை சுலபமாக படிக்க இங்கு அவைகளுக்கு தலைப்புடன் வரிசைப்படுத்தி லிங்க் கொடுத்துள்ளேன்.

பழைய மாணவர்கள் ஏதேனும் விட்டுப்போயிருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்

பாலபாடம் 1
பாலபாடம் 2

ஜாதகம் நேரம் கணிப்பு

தமிழ் மாதங்கள் மற்றும் வருடங்கள்

திதி நட்சத்திரம் சம்பந்தமான பாடம்
வான்வெளியில் கிரகங்கள் இராசியின் பாகைகள்

ராசிகளின் உச்சம், நீசம், நட்பு, பகை கிரகவாரியான விபரம்

சூரிய உதயம் மற்றும் சூரியன் இருக்குமிட பலன்கள்

கணினியில் ஜாதகம் கணிப்பது எப்படி? மற்றும் இந்தியாவின் ஜாதகம்
இந்திய ஜாதகம் வல்லரசு ஆகும் நாள்

ஜாதக வகைகள்

லக்னம் கணிக்கும் வழி மற்றும் திமுக ஜாதகம்

லக்னாதிபதி இருக்குமிட பலன்கள் மற்றும் கலைஞர், ரஜினி, கமல் ஜாதகம்

கிரகசேர்க்கை விவரம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

தசாபுத்தி ஆரம்ப பாடம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதகம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதக விவரத்துடன்
தசாபுத்தி பாடம் புலிப்பாணி பலன்கள் சூரிய,சந்திர,செவ்வாய் மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ராகு,குரு,சனி மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ரஜினி ஜாதகம்
தசாபுத்தி பாடம் புதன், கேது,சுக்கிர மகாதிசை ரஜினி ஜாதகம் விரிவுரை
தசாபுத்தி பாடம் இராகு திசை கேது திசை
தசாபுத்தி பாடம் சூத்திரம்

கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் சூரியன் கோச்சார பலன்கள், அம்மா ஜெயலலிதா ஜாதகம்
கோச்சார பலன்கள் சந்திரன் கோச்சாரபலன் அம்மா ஜெயலலிதா ஜாதக விவரம்
கோச்சார பலன்கள் திருமண அமைப்பு
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம்
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம் 2
கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் கோச்சாரம் சனி மாற்றம்

லக்கினப் பலன்கள் மற்றும் பரல்கள் ஆரம்பம்
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் வீடு
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் பாவம் பாபகர்த்தாரி யோகம்
லக்கினப் பலன்கள் மற்றும் 2ம் வீட்டு பலன்கள் கையில் காசு தங்குமா தங்கதா?
லக்கினப் பலன்கள் மற்றும் 1 லிருந்து 12 வீடுவரை பலன்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு பூர்வபுண்ணியம் (புதியது)


அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
அஷ்டவர்க்க பரல்கள் கணக்கிடுவது எப்படி?
அஷ்டவர்க்க பரல்கள் 7ம் வீடு
அஷ்டவர்க்க பரல்கள் வாழ்க்கை அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் கஷ்டமில்லத வாழ்க்கை பெறவேண்டிய அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பாடம்
அஷ்டவர்க்க பரல்கள் புத்திரபாக்கிய பரல்கள் & சூத்திரம் 1
அஷ்டவர்க்க பரல்கள் மனநோய் ஏற்படும் அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பணம் வரும் அமைப்பு & கஞ்சத்தனம்
அஷ்டவர்க்க பரல்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான பரல்கள் அமைப்பு


திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் 2
திருமண பொருத்தம் மென்பொருள்
திருமண பொருத்தம் 3
திருமண பொருத்தம் கணவன் (அ) மனைவி அமையும் அமைப்பு
திருமண பொருத்தம் திருமண அமைப்பு

ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் (ready reckoner)
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 2
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 3


பொதுவானவை - ஜோதிடம் மதுவா? மருந்தா?
பொது -GMT விளக்கம்
பொது - ஜோதிடபுத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
பொது - கணினி ஜாதகம் கணிப்பது எப்படி?
பொது - ஜோதிட பாடம் நடைபெறும் இடங்கள்

பொது - விதிப்படிதான் நடக்குமா?
பொது - விதிப்படிதான் நடக்குமா? 2ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 3ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 4ம் பகுதி

ஜோதிட கதைகள் படிக்கவேண்டியது கதை
ஜோதிட மேதையின் கதை
சனிஸ்வரன் கதை 1
சனிஸ்வரன் கதை 2
சனிஸ்வரன் கதை 3
சனிஸ்வரன் கதை 4
சனிஸ்வரன் கதை 4.1
சனிஸ்வரன் கதை 5
சனிஸ்வரன் கதை 6 நிறைவுப்பகுதி

அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1
அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

ஜோதிடம் உண்மை என்பதற்க்கான பதிவுகள்

ESP தீர்க்கதரிசன பகுதி 1
ESP தீர்க்கதரிசன பகுதி 2
ESP தீர்க்கதரிசன பகுதி 3 நிமித்தக்காரன்


நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 1
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 2
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 3

Labels:

Wednesday, June 25, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும் ?

விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும். அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் சப்ளை (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வர்த்தகம், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த சப்ளைக்கும்-தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 8 சதவிகிதம் இருந்த பணவீக்கத்தை, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மட்டுமே மேலும் 3 சதவீதம் அதிகரி்க்கச் செய்துவிட்டது.

இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

பணவீக்கத்தை அளவிடுவது எப்படி?:

ரொம்ப சிம்பிள்... தொடர்ந்து ஒரு மூன்றாண்டுகள் நாட்டில் பல்வேறு பொருட்கள் விற்கப்பட்ட விலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள். இதில் அதிக விலை மாறுதல் இல்லாத ஒரு ஆண்டை 'பேஸ் இயர்' அதாவது நிலை ஆண்டாகக் கொள்ள வேண்டும். மற்ற இரு ஆண்டுகளிலும் ஏற்பட்டுள்ள விலை மாறுதலுக்கும், நிலை ஆண்டு விலைக்கும் இடையில் உள்ள மாறுதல் விகிதம்தான் பண வீக்கத்தின் அளவாகப் பார்க்கப்படுகிறது.

இதனை நுகர்வோர் விலைக் குறியீட்டு முறை கணக்கீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ்-CPI) என்கிறார்கள்.

வீக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?:


விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டு வர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம்.

சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை.

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது. இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

அது என்ன ரொக்க இருப்பு விகிதம்?:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக இருப்பு வைத்துவிட்டுத் தான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும். அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

இந்த ரொக்க இருப்பு விகிதத்தை பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?:

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20,000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் ரூ. 1,800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை ரூ. 2,300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் வந்துவிடுகிறது. சந்தையில் இருந்து ரூ. 500 கோடி 'உறிஞ்சப்படுகிறது'. ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?:

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன் தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே 11 முதல் 25 ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 0.50சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 8.25 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், சப்ளையையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது.

உலகில் எந்த நாட்டாலும் உற்பத்தியை நினைத்தவுடன் எல்லாம் அதிகரித்துவிட முடியாது. இதனால் இரண்டாவது option-யை கையில் எடுத்தார் பிரதமர்.

செலவை குறையுங்கள், வெட்டியாய் வெளிநாடு போகாதீர்கள் என்று அமைச்சர்களுக்கும், காரையும் லைட்டையும் தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள் என டி.வி மூலம் கவலை தோய்ந்த முகத்துடன் நமக்கும் அறிவுரை சொன்னார் பிரதமர்.

ஆனால், இந்த அறிவுரையை யாரும் சீரியசாக எடுக்க மாட்டார்கள் என்று பிரதமருக்கு தெரியாதா என்ன.. இதனால் தான் அடுத்த சீரியஸ் option-ஆன பணப் புழக்கத்தின் அளவை கட்டுப்படுத்தும் அஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளார், ரிசர்வ் வங்கி மூலமாக.

இதன் மூலம் வங்கிகள் வசம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி முடக்கிவிட்டது.

இதனால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும்.

அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம். இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... அவையெல்லாமே பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே, பொருட்களாக மாறி இடத்தை அடைத்துள்ளன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் சப்ளையும் , வெளியில் புழங்கும் பணத்தின் அளவும் சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இந்த நிலை தான் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்... ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

ஆனால், உண்மையில் நிரந்தரத் தீர்வுகளும் நிறையவே உள்ளன. அதற்குத் தேவை 'பொலிட்டிகல் வில்' என்பார்களே அந்த சமாச்சாரம்.

இந்தியாவிலாவது பண வீக்கம் 11.05 சதவீதம். சீனாவில் இன்றைக்கு பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனல் அவர்களது பொருளாதாரம் முடங்கி விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

காரணம் அந்த நாடும் அரசும் காட்டும் 'பொலிடிக்கல் வில்'.. அது என்னப்பா வில்.. அம்பு என்கிறீர்களா...

உங்களுக்கு இப்போதே 'கண்ணை கட்டியிருக்கும்'..

அதனால், நாளை சொல்கிறேன்!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் சிறப்புச் செய்தியாளர் ஷங்கர்)

Labels:

அடுத்த ஆண்டில் மகளிர் டுவென்டி- 20 போட்டி- ஆலோசனைகள் தேவை

இப்போட்டிகள் பெரும் வெற்றி பெற பதிவர்கள் ஆலோசனைகளை பின்னுட்டமாக தருக

முதல்முறையாக மகளிருக்கான டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் இடையே டுவென்டி- 20 போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அண்மையில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையடுத்து மகளிர் பிரிவிலும் டுவென்டி- 20 போட்டிகளை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவர் தொடருடன், மகளிர் தொடரையும் நடத்த அது தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆடவர் டுவென்டி- 20 போட்டிகள் லார்ட்ஸ், ஓவல் மற்றும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானங்களில் நடைபெறும். டான்டன் மைதானத்தில் மகளிர் போட்டிகள் நடத்தப்படும்.

மகளிர் டுவென்டி- 20 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத்தீவு அணிகள் பங்கேற்கும்.

Labels:

Monday, June 23, 2008

சிம்பு கால் எலும்பு முறிந்தது

சண்டை மற்றும் ஆக்‍ஷன் காட்சிகளில் வழக்கமாக நடிகர்கள் ஏதாவது காயம்பட்டுக் கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நடனம் ஆடும் போது அடிபட்டுக் கேட்டிருக்கிறீர்களா?

ஆம். சிலம்பரசன் தான் அந்த நடிகர். கடினமான நடன அசைவுகளை இயக்குனரிடம் கேட்டு வாங்கி அதனால் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. `காளை' படத்தில் பாடல் காட்சியின்போது கட்டை விரலை உடைத்துக் கொண்ட சிம்பு, தற்போது நடித்து வரும் `சிலம்பாட்டம்' படத்தில் பாடல் காட்சியின் போது நடனம் ஆடி கால் மூட்டை உடைத்துக் கொண்டார்.

கவிஞர் வாலி எழுதிய `தமிழ் என்ற நானொரு தமிழன்டா' என்ற பாடல் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றது. நடன இயக்குனர் அசோக்ராஜ் நடனம் அமைக்க, சிம்பு மூட்டை தரையில் பதித்து ஆடுவது போன்ற காட்சி. ரிகர்சலில் சரியாகச் செய்த சிம்பு, டேக்கின்போது ஸ்லிப்பாகி தரையில் விழ மூட்டில் சரியான முறிவு.

வலியால் துடித்தவரை படக்குழுவினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகென்ன காலில் மாவுக்கட்டு. `சிலம்பாட்டம்' சிம்புவுக்காக காத்திருக்கிறது.

Labels:

Sunday, June 22, 2008

என்.எஃப்.சி. தொழில் நுட்பம் என்பது என்ன?

இரண்டு தொடர்புக் கருவிகளுக்கு இடையே கம்பியில்லா தொடர்பு பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யும், ஒரு வகையில் செல்பேசிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பம் என்.எஃப்.சி என்று கூறலாம்.

நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமே என்.எஃப்.சி. என்று அழைக்கப்படுகிறது.

தற்போது செல்பேசிகளிடையேயான தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் தொழில்நுட்பம் ப்ளூடூத் ஆகும். என்.எஃப்.சி. தொழில்நுட்பமானது, இரண்டு செல்பேசிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை சாத்தியப்படுத்துகிறது என்றால் ப்ளூடூத் பல சாதனங்களுக்கு இடையே தரவுப் பரிமாற்றங்களை சாத்தியமாக்குவது.

ஐ.எஸ்.ஓ. 14443 தொழில் நுட்பத்தின் ஒரு எளிய விரிவாக்கமே இந்த என்.எஃப்.சி. தொழில் நுட்பம், ஸ்மார்ட்கார்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் ரீடர் ஆகியவற்றை ஒரே சாதனத்தில் கொண்டதுதான் என்.எஃப்.சி.

இது ஏற்கனவே உள்ள ஐ.எஸ்.ஓ 14443 ஸ்மார்ட்கார்டுகள் மற்றும் ரீடர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஏற்கனவே பொதுப் பயன்பாடுகளில் எலக்ட்ரானிக் எந்திரங்களுடன் சுலபமாக ஒத்துப்போகும் தன்மை கொண்டது. என்.எஃப்.சி. பெரும்பாலும் செல்பேசிகளில் பயன்படுத்துவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் ஒரு 10 செ.மீ வரை உள்ள தூரத்தில் இருந்து கொண்டு இரண்டு சாதனங்களிடையே தரவுப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். ஒயர் இணைப்பு தேவையில்லை.

இரு சாதனங்களின் உள்ளேயும் ஒரு சிறு லூப் ஆன்டெனா பொருத்தப்படும். இது உலகம் முழுதும் கிடைக்கும் ரேடியோ அலைவரிசையில் இயங்கும் தன்மை கொண்டது. இதன் பேன்ட்வித் சுமார் 2 மெகா ஹெர்ட்ஸ். அதிகபட்சமாக 424 கிலோபைட் தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும்.

தற்போது செல்பேசிகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பம் விரைவில் செல்பேசியே கிரெடிட் கார்ட், டெபிட் கார்டாக பயன்படுத்த உபயோகப்படும். எந்த ஒரு பொருட்கள், அட்டைகளில் உள்ள அடையாள குறிகளுக்கு இந்த தொழில் நுட்பம் பயன்படுமாறு விரிவடையும்.

மேலும் எதிர்காலத்தில் ப்ளூடூத் 2.1 சாதனங்களுடன் என்.எஃப்.சி. தொழில் நுட்பமும் சேர்க்கப்படும். இதனால் ப்ளூடூத் செயலை முடுக்கி விட்டு காத்திருக்க வேண்டிய நேரம் மிச்சம். செல்பேசியை லேசாகத் தொட்டாலே போதும், ப்ளூ-டூத் செயல்படத் துவங்கிவிடும்.

மேலும் எலெக்ட்ரானிக் டிக்கெட்டிங், எலக்ட்ரானிக் கீகள் உள்ளிட்ட பல எதிர்கால பயன்பாடுகளும் இதற்கு உண்டு

மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கில் சென்று அறிந்து கொள்ளுங்கள்


விஜயகாந்த், சரத்தைத் தொடர்ந்து விஜய்? (கடவுளே!!!)

(இதில் அடைப்பக்குறிக்குள்ளில் இருப்பது மட்டும் நான் எழுதியது)

நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் காலமாகி விட்டது என்றே கூறலாம். (ஓஓஓ....)

கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கி ஒரு கலக்கு கலக்கி விட்டார். (அதுதான் சாக்கடை தெளிந்துவிட்டதா???)

சரத்குமார் திமுகவில் இருந்து வெளியேறி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார். ஃபார்வர்டு பிளாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

(ஒரு கட்சியில் இருந்தே பப்பு வேகவில்லை)

இந்த வரிசையில் புதிதாக இணையப் போகிறவர் இளைய தளபதி விஜய். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது பிறந்த நாளில், ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி மன்றக் கொடியை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

(நமது நாட்டின் பணவிக்கம் உடனே 3% சதவிகதத்திற்கு வந்துவிடும்... விலைவாசி குறைந்துவிடும்..... சென்சக்ஸ் 25000 புள்ளிகளை தாண்டிவிடும்?)

ஆனால் வழக்கம் போல் அரசியல் ஆசையோ அல்லது நோக்கமோ தனக்கு இல்லை என்று விஜய் அறிவிப்பார். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்?

(அது தெரிந்தால் ம்ம்ம்ம்ம்.....)
(பின்குறிப்பு: நான் அஜித் ரசிகன் அல்ல)

Labels:

Saturday, June 21, 2008

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.


அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.


ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவே இந்த ஆன்லைன் டிக்‌ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளன.


20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் கான்டெக்ஸ்சுவல் அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு த்யாரித்துள்ளது.


இணையதளத்தின் சைடு பாரில் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.


பான்கிரியாஸ் என்றால் கணையம் என்று நமக்கு தெரியும், லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள் விஷுவல்.மெரியம்வெப்ஸ்டர்.காம். இணையதளத்திற்கு.


1996-ம் ஆண்டு தி விஷுவல் டிக்‌ஷனரி என்ற புதிய அகராதி சி.டி. ரோம்களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட சி.டி. ரோம் டிக்‌ஷனரிகள் வந்த வண்ணம் உள்ளன.


ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.

Labels:

சிம்புவின் அடுத்தது 'டண்டனக்கா'!

சிம்புவின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. வல்லவன் படத்துக்காக நயன்தாராவின் உதட்டைத் தன் பற்களால் கவ்வி இழுத்து அதைப் போஸ்டராக்கி பரபரப்பு பண்ணியவர், இப்போது தன் குறும்பை டைட்டிலிலேயே காட்டத் தொடங்கிவிட்டார்.

சிலம்பாட்டம் படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்துக்காக ஒரு படம் செய்கிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் போடா போடி.

முழுக்க முழுக்க கனடாவில் எடுக்ப்படவிருக்கும் இந்தப் படத்தின் பெயரை இப்போது திரு போடா திருமதி போடி என மாற்றம் செய்திருக்கிறார் சிம்பு. அதோடு விட்டாரா... டண்டனக்கா கப்பிள் என அந்தத் தலைப்புக்குக் கீழே ஒரு உப தலைப்பையும் கொடுத்திருக்கிறார் சிம்பு.

அது சரி... சிம்புவின் அந்த டண்டனக்கா ஜோடி யார்? சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி என்கிறார்கள்.

Labels:

Friday, June 20, 2008

மன்னிப்பு கேட்க மாட்டோம்- ராமதாஸ்

பெரிய எழுத்தாக இருப்பதை இருமுறை படிக்கவும்.


சென்னை: குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம்। அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ மாட்டோம், அது தேவையற்றது என டாக்டர் ராமதாஸ் கூறினார்।


இன்று நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

தனிப்பட்ட ஒரு பிரச்சினையை பொதுப் பிரச்சனையாக்கி அதற்கும் பாமகவையே பொறுப்பாக்கிவிட வேண்டும் என்ற திமுக திட்டத்தின் வெளிப்பாடுதான் இப்போது எழுந்துள்ள நிலைக்குக் காரணம். இந்த நிலைக்கு நானோ, பாமகவோ பொறுப்பல்ல.

வன்னியர் சங்க கல்விக் கோயிலை திறந்து வைத்ததே முதல்வர் கலைஞர்தான். ஆனால் அவருடைய மூத்த அமைச்சர் அதை பொறம்போக்கு என்கிறார். இதை நாங்கள் வேண்டுமானால் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளலாம். மாவீரன் குரு போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா...

குரு பேச்சு குறித்து எழுந்த பிரச்சினை முடிந்து போன விஷயம். அதற்காக மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ தேவையற்றது. அதை நாங்கள் செய்ய மாட்டோம்.

எங்களைப் பார்த்து வன்முறைக் கட்சி என்றும் சதி செய்கிறார்கள் என்றும் கலைஞர் குற்றம் சுமத்துகிறார்.

கலைஞரே, மனசாட்சியுடன் பேசுங்கள். வரலாற்றை மறந்து விடாதீர்கள். உங்கள் மீது உங்கள் கட்சிக்காரர்களைவிட அதிகம் மதிப்பு வைத்தவர்கள் நாங்கள். எங்களது கட்சியின் மாநாட்டுக்கு உங்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, மாநாட்டுப் பந்தல் முழுக்க பார்க்குமிடங்களிலெல்லாம் உங்கள் படங்களையும் சுவரொட்டிகளையும் வைத்தவர்கள்.

அப்போது நீங்கள் ஆற்காட்டாரைப் பார்த்து, உங்களால் கூட இப்படி மாநாடு நடத்த முடியாதே என்று கூறிப் பெருமைப்பட்டீர்கள். நாங்களா வன்முறையாளர்கள்? சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்.

1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு மதுரைக்கு வந்த இந்திரா காந்தி அம்மையாரை பயங்கர ஆயுதங்களுடன் துரத்தித் துரத்தி கொல்ல முயன்றது யார்... திமுக அல்லவா... அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்தல்லவா சென்னைக்கு வர வேண்டியிருந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து வன்முறையாளர்கள் என்பது நியாயமா...?

பாமக பதவிக்கு ஆசைப்படும் கட்சியல்ல.(!!!) மானமும் கொள்கையும்தான் எங்களுக்குப் பெரிது।(???) சில பத்திரிகையாளர்கள் எங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்றும், பதவிக்காக அணி மாறுபவர்கள் என்றும் எழுதுகிறார்கள்.

ஏன், திமுக அணி மாறியதே இல்லையா. பதவிக்கு சண்டை போட்டதில்லையா?. அப்படியா நாங்கள் நடந்து கொண்டோம். மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவியைப் பிடிக்க திமுக என்னவெல்லாம் செய்தது? நாங்கள் அப்படியா நடந்து கொண்டோம்?

நண்பர்களே... பாமக அமைதி விரும்பி. வன்முறைக்கு எதிரான கட்சி. இந்த மண்ணிலே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்று அறவழியில் குரல் கொடுக்கும் அமைதி இயக்கம். அந்தக் கட்சியைப் பார்த்து கலைஞர் இப்படியெல்லாம் நெருப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியது யார் செய்த சதி என்று புரியவில்லை.

இனி பாமகவின் பாதை புதிது. இந்தக் கூட்டணி உறவு முறிந்ததும், அடுத்து எடுக்கப்போகும் முடிவு குறித்தும் நீங்கள் என் முடிவுக்கு விட்டு விடுவதாகச் சொன்னீர்கள். ஆனால் நான் அதை உங்கள் முடிவுக்கே விட்டுவிட்டேன். அதுதான் பொதுக்குழு தீர்மானமாக வந்திருக்கிறது.

இனி பாமக வெற்றிப் பாதையில் வெற்றி நடைபோடும் என்றார்.

தீர்மான விவரம்:

முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பாமக மீது மலிவான காரணங்களைக் கூறி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக செயல்பட்டுள்ளது. இந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளைக் (?)கலந்து ஆலோசிக்காமல் பாமகவை நீக்கியிருப்பது, திமுகவின் தன்னிச்சையான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது।

மன்னிப்பு கேட்கமாட்டேன்:

முன்னதாக, கூட்டணி முறிவுக்குக் காரணமானவரான காடுவெட்டி குரு பேசுகையில், நாங்கள் கட்சியின் சார்பில் நடத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதை ஒட்டுக் கேட்டதே பெரும் தவறு. தனிப்பட்ட கூட்டம் அது. கூட்டணிக் கூட்டணமோ அல்லது பொதுக் கூட்டமோ அல்ல.

அதில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். அதையெல்லாம் இவர்கள் ஒட்டுக் கேட்பதா. இதற்காக நாங்கள்தான் நியாயமாக கோபித்துக் கொள்ள வேண்டும். எங்கள் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குத் தொடுத்து வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் குரு.



Labels:

யு.எஸ்.ஸைக் கலக்கும் தசாவதாரம் - ஒரு பார்வை

கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் தசாவாதாரம் பற்றிய விமர்சனம் எழுதிவிட்டனர்। நான் மட்டும் எதாவது எழுதாவிட்டால் என்னை எதாவது செய்துவிட்டால்? ஆகவே இந்த பதிவு...

போன வருடம் தமிழ் வாழும் நல்லுலகத்தினையே கலக்கிய ரஜினியின் சிவாஜி படத்தையே இதுவரை பார்க்காதவன் நான்

விரைவில் கலைஞர் டீவியில் பார்த்துவிடலாம் என இருக்கிறேன்।

அடுத்து தலைப்பிற்கு சம்பந்தமான செய்தி

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு அமெரிக்காவில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளதாம்।

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 நகரங்களில் தசாவதாரம் திரையிடப்பட்டுள்ளது. இங்கு அனைத்துக் காட்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக வார இறுதி நாட்களில் அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் ஆகியுள்ளனவாம்.

வசூலைப் பொறுத்தவரையில், வார இறுதி நாட்களில் இதுவரை எந்த தென்னிந்தியப் படங்களுக்கும் கிடைத்திராத வகையில் தசாவதாரத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதன் மூலம் முந்தைய சாதனைகளையும் தசாவதாரம் முறியடித்துள்ளதாம்.

தமிழ் தவிர தசாவதாரத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சிரஞ்சீவி படங்களுக்கு இணையான வரவேற்பு தசாவதாரத்திற்குக் கிடைத்துள்ளதாம்.

அனைத்துத் தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறதாம். நீண்டவரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட் பெற்று படம் பார்க்கிறார்களாம்.

சமீபத்தில் ரிலீஸான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள சர்க்கார் ராஜ் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை விட தசாவதாரத்திற்கு அதிக அளவிலான வரவேற்பு காணப்படுகிறதாம்.

தசாவதாரத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஆங்கில சப் டைட்டிலுடன் அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழர்கள், தெலுங்கர்கள் தவிர மலையாளிகள், கன்னட மொழி பேசுவோரும் பெருமளவில் திரண்டு வந்து படத்தை ரசித்துப் பார்க்கிறார்களாம்.

அதேபோல அமெரிக்கர்களும் படத்தைப் பார்க்க திரளுகின்றனராம். படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக இருப்பதாக அவர்கள் பாராட்டுகின்றனராம்.

Labels:

Sunday, June 15, 2008

கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து....


ஆனால் நீங்கள் கண்டுபிடியுங்களேன் அது என்னவென்றுதான்

இந்தப்பதிவை எனது புத்துணர்ச்சி படப்பதிவில் இட்டுள்ளேன்.

ஆனால் என்ன காரணத்தினிலோ தமிழ்மணத்தில் அப்பதிவை புதிப்பிக்க இயலவில்லை.

ஆனால் அனைவருக்கும் உடன் கொண்டு சேர்க்கவேண்டும் என ஆர்வத்தில் இதில் இணைப்ப்திவாக இதை இட்டுள்ளேன்.

பார்த்துவிட்டு தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்

கூடுதுறை

Labels:

Sunday, June 1, 2008

ஆடாதேடா மனிதா!!! சென்ற பதிவிற்கு எதிர்பதிவு

ஆடாதேடா மனிதா!! ஆடாதேடா மனிதா!!! சென்ற பதிவிற்கு எதிர்பதிவு இது

மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க இயலும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இந்த புகைப்படம் உலகின் மிக மிக உயரமான கட்டிடமான BURJ DUBAI  (உயரம் 2620 அடி) யில் இருந்து எடுக்கப்பட்டது





அடுத்து கீழே உள்ள படத்தின் இடது பக்க மூலையை கவனியுங்கள் பூமியின் வளைவுகளை காண முடியும்

படத்தில் மேல்புறத்தில் கட்டிட வேலை செய்து கொண்டு இருப்பவர்களால் பூமி சுற்றுவதை உணரமுடிகிறாதாம்.

படம் பெரியதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கிட்டுகொள்ளுங்கள் அப்போது தான் தாங்களும் உணரமுடியும்

இப்போது கூறுங்கள் மனிதனால் செய்யமுடியாதது எதாவது உள்ளதா ??





Labels: